districts

img

விக்கிரவாண்டி அருகே இருளர் குடியிருப்பு திறப்பு

விழுப்புரம், ஜூலை 30-

    விக்கிரவாண்டி அருகே எண்ணாயிரம் கிராமத்தில்  இருளர் இன மக்களுக்கு ரூ.54.17 லட்சத்தில் புதி தாக கட்டப்பட்ட குடியிருப்பு களை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்து பயனாளி களிடம் ஒப்படைத்தார்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், எண்ணாயிரம் ஊராட்சி மன்றத்திற்குட் பட்ட எண்ணாயிரம் கிராமத்தில் 13 இருளர் இன குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.54.17- லட்சத்தில் புதிதாக குடி யிருப்புகள் கட்டப்பட்டன.

   அந்த வீடுகளை பய னாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, இரா.இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.