அம்பத்தூர, ஜன. 6- ஆவடியில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. ஆவடி தொகுதிக்குட் பட்ட பருத்திப்பட்டு பகுதி யில் ரூ.2.50 கோடி மதிப் பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் சமீபத்தில் கட்டி முடிக்கப் பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைதொடர்ந்து அங்கு நடைபெற்ற விழாவில் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் குத்துவிளக்கு ஏற்றி நூல கத்தை பார்வையிட்டார். மேலும் ஆவடி மாநகராட் சிக்கு உட்பட்ட 35, 40, 41, 43 ஆகிய வார்டுகள், திரு நின்றவூர் நகராட்சியில் 1 முதல் 9 வரை வார்டுகளுக் கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் மேயர் கு.உதய குமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், துணை ஆணையர் சங்கரன், மண்டலக்குழு தலைவர் ஜி.ராஜேந்திரன், பொறி யாளர் பி.வி.ரவிச்சந்திரன், திருநின்றவூர் நகர்மன்றத் தலைவர் உஷாராணி ரவி, துணைத்தலைவர் சரளா நாகராஜ், ஆணையர் சுரேந்தர் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.