வடசென்னை மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். இதில் மேயர் ஆர்.பிரியா, தலைமை செயற்குழு உறுப்பினர் சி.மகேஷ்குமார், பகுதிச் செயலாளர்கள் வ.முரளிதரன், ஏ.நாகராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, நிர்வாகிகள் அயூப்கான், சுரேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.