விழுப்புரம்,அக்.6- திருவெண்ணெய்நல்லூ ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வெண்ணைநல்லூர் வட்டக்குழு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டச் செயலாளர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட குழு உறுப்பினர் பி.தங்கவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் செங் கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் வட்டக் குழு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.குமார் எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.