திருத்தணி,செப்.25- திருத்தணியில் உலக தரத்துடன் கூடிய பீகாக் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவுகள் துவக்கி வைக்கப்பட்டது திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ளது பீகாக் மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவு, ஐசியூ, இசிஜி, எக்கோ மற்றும் இதயத்திற்கு கேத்லேப் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தை இன்மைக்கான கருத்தரிப்பு மையம் திருத்தணி மற்றும் சோளிங்கர் நகரத்தில் இயங்கி வருகிறது. தற்போது கூடுதலாக திருத்தணியில் உலக தரத்துடன் கூடிய இதய அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பீகாக் மருத்துவ மனை நிறுவனர் டாக்டர் ஸ்ரீ கிரண் தலைமை தாங்கினார். மகப்பேறு மருத்துவர் அனுபமா கிரண் வரவேற்றார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் பொது அறுவை சிகிச்சை பிரிவு ஓய்வு பெற்ற மருத்துவர் எம். ரகுராமன், மருத்துவர்கள் சுயம்புலிங்கம், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்க ளாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் வீரராகவ ராவ் கலந்து கொண்டு இந்த மருத்துவமனைக்கு தேசிய அங்கீகாரம் பெற்ற ஃபுல் என்ஏபிஎச் சான்று வழங்கினார். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, மருத்துவர் பிரகாஷ் லாலு ஜோசப், முன்னாள் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், சுதந்திர மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரங்கநாதன், டிஆர்எஸ் குளோபல் தாளாளர் டீ.ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.