ராணிப்பேட்டை, செப். 25 - ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலையில் புதிதாக மாவட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தலைமையில் திங்களன்று (செப். 25) அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார். ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் சீமா. ரமேஷ் கர்ணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்ளிட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.