வேலூர், மே 31- வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோட்டையின் பழமையான தோற்றத்துக்கு வலுசேர்க்கும் வகையில் உலோகத்தால் வேலைப்பாடுகளுடன் கூடிய மின்கம்பங்கள், கருங்கற்களால் ஆன நடைபாதை, கழிவறை, உணவகம், சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு கற்க ளால் ஆன இருக்கைகள், மிகப்பெரிய தேசிய கொடி கம்பம் என பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோட்டை அகழியில் தூர்வாரப்பட்டு கரைகள் புதிதாக கட்டப்பட்டது. தற்போது பொது கழிவறை கட்டிடம், உணவகமும் கட்டி முடிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெள்ளியன்று (மே 31) திறந்து வைத்தார். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, மத்திய தொல்லியல் துறை அலு வலர் அகல்யா, காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் கூறிய அவர், “கோட்டை பெரியார் பூங்காவை மாநகராட்சி, மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து விட்டது. தொல்லியல் துறை அங்கு சில மேம்பாட்டுப் பணிகளை செய்த பிறகு 3 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும்”என்றார். கோட்டை உள்ள நுழைவு பகுதியில் உள்ள இருபக்க பூங்காக்களில் மின் விளக்கு கள் அமைக்கப்படும் என்றும் கோட்டை யில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே, திட்டமிடப்பட்ட வேலூர் கோட்டை வரலாற்றை விளக்கும் 3டி ஷோ அரங்கிற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஜலகண்டேஸ்வரர் கோவில் தங்க தேர் நிறுத்துமிடம் தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்றும் ஆட்சியர் கூறினார்.