திருவண்ணாமலை, மே 12- அரியலூர் சிறுமி வல்லுறவு மற்றும் கொலை வழக்கு தீர்ப்புக்காக களப் போராளிகளாக செயல்பட்ட வர்களுக்கு பாராட்டு விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணா மலை மாவட்டக்குழு அலு வலகத்தில் சனிக்கிழமை (மே 11) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கட்சியின மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பேசுகையில், தேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்து வரு கிறது. இத்தகைய சம்பவங் களின் போது, சில காவல் துறையினர், ஊர் பிரமுகர் கள் வழக்கை நீர்த்துப்போக செய்ய முயற்சி செய்கின்ற னர். பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு ஆதரவாக களத்தில் சமரசமின்றி நிற்பது சிபிஎம் மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக் காக பணியாற்ற, வழக்கறி ஞர்கள் அதிகமாக உழைக்க வேண்டும், ஏழை, எளிய மக்களுக்காக பணியாற் றும் வகையில் இளம் வழக் கறிஞர்களை, கம்யூனிச சித்தாந்த கருத்து உள்ளவர் களாக மாற்ற வேண்டும். பெண்களை அடிமையாக பார்ப்பது, போக பொருளாக நினைப்பது ஆர்எஸ்எஸ் தத்துவமாகும். காவல் துறை, நீதி மற்றும் முக்கிய இடங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட் டுள்ளனர் அவர்களை அடை யாளம் கண்டு அம்பலப் படுத்தவேண்டும்.
பாதுகாப்பு அரணாக சிபிஎம் களப்போராட்டத்தை யும், சட்டப் போராட்டத் தையும் இணைக்க வேண் டும். இந்த வழக்கில் கிடைத்த அனுபவத்தை பாடமாக பெற வேண்டும். இத்தகைய வழக்குகளின் தீர்ப்புகளை பிரசுரமாக வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் மார்க்சிஸ்ட் கட்சியை பலப் படுத்த வேண்டும். இந்த வழக்கு வெற்றிபெற போராடிய வழக்கறிஞர் அபிராமன், கட்சி நிர்வாகி கள் மற்றும் சிறுமியின் குடும்பத்தினருக்கு பாண்டி பாராட்டு தெரிவித்தார். வழக்கறிஞர் அபிராமன் தலைமை உரையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து திருவண்ணாமலை, சென்னை, அரியலூர் மாவட்டங்களில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றதை பெருமையோடு கூறினார். தனிச்சட்டம் இயற்றுக அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார் பேசிய போது, தமிழ கத்தில் ஆணவக் கொலை களை தடுக்க தனி சட்டம் ஏற்படுத்த வேண்டும், இப்படி யான ஆணவக் கொலை களில் பாதிக்கப்பட்ட மக் களை பாதுகாக்க மாவட்ட அளவிலான மையங்கள் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார். நகர செயலாளர் எம். பிரபலநாதன் வரவேற்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் ப. செல்வன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற் குழு உறுப்பினர் செல்ல துரை, அரியலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கந்தசாமி, வழக்கறிஞர் துரை அருணன், சிபிஎம் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், அரியலூர் மாதர் சங்க மாவட்ட செயலா ளர் அம்பிகா உள்ளிட்டோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில், இந்த வழக்கில் போராடிய வழக்க றிஞர் எஸ். அபிராமன், சிறுமி யின் குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகி களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. நிறைவாக வழக்கறிஞர் எஸ் .அபிராமன் ஏற்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் எஸ். ராமதாஸ் நன்றி கூறினார்.
உறவினர்களே வராதபோது செங்கொடி வந்து நின்றது...
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் சகோதரி சிவரஞ்சனி ஏற்புரையில், “என் சகோதரியை காணவில்லை என்று புகார் அளிக்க காவல் நிலையம் சென்று நள்ளிரவு ஒரு மணி வரை காத்துக் கிடந்தோம். ஆனால் எங்களது புகாரை காவல்துறையி னர் பதிவு செய்ய வில்லை. புகாரை பெறுவதற்கு 15 நாட்கள் அலை கழித்தனர். உறவினர்கள் கூட சாட்சி சொல்ல முன்வராத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் எங்களது குடும்பத்திற்கு துணை நின்றது. என் சகோதரியின் இறுதி நிகழ்ச்சியின் போது, சவப்பெட்டி செய்து தரக்கூட யாரும் முன் வரவில்லை. வழக்கில் ஒவ்வொரு விசாரணையின் போதும், எங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பக்கபலமாக இருந்தனர். நீதிமன்றத்திற்கு வந்து எங்களுக்கு தைரியம் சொன்னதால் தான், இந்த வழக்கில் எங்களால் இறுதி வரை தாக்குப் பிடிக்க முடிந்தது” என்றார்.