districts

ஆன்லைன் ரம்மி வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டை, ஆக. 13-

      கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய பட்டதாரி இளைஞர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

      அரக்கோணம் அடுத்த பரமேஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் விஜயகுமார், வேலையின்றி இருந்துள்ளார். இவர் தனது தாய் நடத்திவரும் தள்ளுவண்டி டிபன் கடை வியாபாரத்தை கவனித்து வந்தார்.

     இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பலரிடம் 7 லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, அதனை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், மன உளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.