districts

விழுப்புரத்தில் 446 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

விழுப்புரம், ஆக.1-

     விழுப்புரம் திருவிக வீதி யில் உள்ளது அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி. இதில்4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் 446 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

      ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். மூன்று ஆசிரியர்கள் உதவி செய்து வருகின்றனர். இதனால் மாணவர்க ளின் கல்வி தரம் பாதிக்கப் படுகிறது.  இதுகுறித்து இரண்டு பல முறை பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்த பள்ளியின் மேலாண்மை குழு துணைத் தலைவர் எம். வேலாயுதம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.