திருவண்ணாமலை, அக்.7- அரசுத் துறை ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெரும் இயக்கம் நடத்துவதென ஓய்வூதியர் சங்க மாநில பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7 ஆம் மாநில பிரதிநிதித்துவ பேரவை திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபத்தில் நடை பெற்றது. பேரவையின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கொடியை மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி ஏற்றி வைத்தார், அகில இந்திய மாநில அரசு ஓய்வூதி யர் கூட்டமைப்பு சங்க கொடியை நெ.இல.சீதரன் ஏற்றி வைத்தார், வரவேற்பு குழு தலைவர் ஜெ. ராஜா வரவேற்று பேசினார். அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி க.சுவாமிநாதன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கை யும், மாநில பொருளாளர் ந. ஜெயச்சந்திரன் நிதிநிலை அறிக்கை யும் வாசித்தனர். இந்த பேரவையில், ஓய்வூதியர் மாத இதழ் சந்தா சேகரித்த முதல் மூன்று மாவட்டங்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில மையத்தின் இணையதளத்தை, மாநில தலைவர் நெ.இல.சீதரன் தொடக்கி வைத்தார். தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூ தியம் ரூ.7850 கிடைக்கப்பெறாத சத்து ணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்கள் மருத்துவ வசதியும், காப்பீடு தொகையும் கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள், மேலும், பல ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை களுக்கு செலவு செய்த தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்கிட வேண்டும், இந்த திட்டத்தை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஓய்வூதியர்களுக்கு நியாயம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று முதலமைச்சரிடம் அளிப்பது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில், ஐந்து அம்ச கோரிக்கைகளை உடனே நிறை வேற்ற கோரி, டிசம்பர் 12 ஆம் தேதி, கண்ணில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் ப. கிருஷ்ணமூர்த்தி, மாநிலச் செய லாளர் சி. சுப்பிரமணியன் நன்றி கூறினர்.