கடலூர், ஜன.10- எல்ஐசி பங்கு விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும், பொதுத் துறைகளை பாதுகாக்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தைகளை உடனே துவக்க வேண்டும், ஆயிரக்கணக்கான காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும், நிர்வாகத்தின் தன்னிச்சையான போக்குகளை மாற்றிக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு போராட்டக் குழுவின் சார்பில் கடலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு ஒரு மணி நேர வெளிநடப்பு, போராட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் ராஜூ தலைமை தாங்கி னார். கோரிக்கைகளை விளக்கி வேலூர் கோட்ட இணைச் செயலாளர் ஜி.வைத்தி லிங்கம் பேசினார். போராட்டத்தை வாழ்த்தி முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் வள்ளிநாயகி, வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் ஆனந்தன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன், எல்ஐசி ஓய்வூதியர்கள் சங்கத்தின் செயலாளர் சுகுமாரன், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் புருஷோத்தமன், சசி ஆகியோர் பேசினர்.