districts

சென்னை முக்கிய செய்திகள்

இன்று ஓணம் பண்டிகை:  பூக்கள் விலை அதிகரிப்பு

சென்னை,ஆக.28- ஓணம் பண்டிகையை யொட்டி பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர்,  சேலம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள்  விற்பனைக்கு வந்துள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சாமந்தி- ரூ.100வரை, பன்னீர் ரோஸ்-ரூ.70, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி- ரூ.200, மல்லி-ரூ.300, முல்லை-ரூ.180, ஜாதி-ரூ.240, சம்பங்கி-ரூ.150, கனகாம்பரம் -ரூ.400க்கு விற்கப்படுகிறது.

மாதர் சங்க கிளைகள் உதயம்

சென்னை, ஆக. 28 - அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புதிய கிளைகள் எழும்பூர் பகுதி, அப்பாராவ் கார்டன், செங்கடாஜபதி தெருவில் உதயமாகி உள்ளது. இந்த கிளை அமைப்பு கூட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலா ளர் வி.தனலட்சுமி, பகுதி செயலாளர் எஸ்.நாகராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘ஏ’ கிளைத் தலைவராக வி.மஞ்சுளா, செயலாளராக ஜி.ரேவதி, பொருளாளராக இ.ராஜேஸ்வரி  ஆகியோ ரும்,  ‘பி’ கிளைத் தலைவ ராக சேனியம்மா, செயலாள ராக மாரியம்மாள் , பொரு ளாளர் ராதா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

கொதிகலனில் தவறி விழுந்தவர் பலி

திருவள்ளூர்,ஆக.28- திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் தனியார்  எண்ணெய் நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூ ராம் (வயது20) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு  பணியில் சேர்ந்தார். அவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு  எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில்  கம்பெனியில் உள்ள கொதிகலன் அருகே ராஜூ ராம் பணியில்  இருந்தார். பணி முடிந்ததும் அவர் கீழே இறங்கி வந்தபோது  திடீரென கால் தவறி அருகில் இருந்த கொதி கலனிற்குள் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழி லாளர்கள் ராஜூராமை மீட்டனர். பலத்த தீக்காயம் அடைந்த  அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூ ராம் இறந்தார்.

புட்லூரில் வாலிபர் அடித்துக்கொலை

திருவள்ளூர்,ஆக.28- திருவள்ளூரை அடுத்த புட்லூர் ஏரியில் திங்களன்று வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.  இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். பேண்ட், டி-சர்ட்  அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்?  என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்துவிட்டு உடலை ஏரியில் வீசி சென்றிருப்பது தெரிந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பாக புட்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபரின் கழுத்தை அறுத்த சிறுவன் கைது

சென்னை,ஆக.28- தண்டையார்பேட் ்டையை சேர்ந்தவர் ஆகாஷ்.  இவருக்கும் அதே பகு தியை சேர்ந்த கிளி என்கிற தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த  மோதலில் கடந்த மாதம் தினேசை ஆகாஷ் வெட்டி னார். இந்த வழக்கில் கைதான ஆகாசை போலீ சார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமினில் வந்தார். தினேசை வெட்டியதால் ஆத்திரத்தில் இருந்த அவரது தம்பியான சிறு வன் பழி தீர்க்க முனைந்தார்.  இந்நிலையில் ஞாயிறன்று இரவு ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஆகாஷ் தனியாக வந்த போது அவரது கழுத்தை பிளேடால் அறுத்து விட்டு  சிறுவன் தப்பி ஓடிவிட்டான். பின்னர் சிறுவனை போலீ சார் கைது செய்தனர்.

சேப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டையிலிருந்து  தலைமைச் செயலகத்திற்கு கூடுதல் பேருந்துகள்

தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை

சென்னை, ஆக. 28- சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரையி லான வழித்தடத்தில் போதிய  பேருந்துகள் இயக்க வேண்டும் என்று தலைமைச்  செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் சு.அரிசங்கர்  ஆகியோர் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை யிலான வழித்தடத்தில் நான்காவது ரயில் பாதை  அமைக்கும் பணிக்காக சென்னை கடற்கரை - வேளச் சேரி மார்க்கத்தில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையா னது ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் ஏழு மாதங்களுக்கு கடற்கரை முதல் சிந்தா திரிப்பேட்டை வரை இயக் கப்படமாட்டாது. வேளச் சேரியில் இருந்து வரும்  ரயில்கள் சிந்தாதிரிப் பேட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே  இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் பறக்கும் ரயில் சேவையை ஏறத்தாழ 1000 தலைமைச் செயலகப் பணியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய அறிவிப்பால் பெரிதும் பாதிக்கப்படு பவர்கள் தலைமைச் செயலகப் பணியாளர் கள்தான். இதனால் அவர் கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வர இயலாத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மார்க்கத்தில் பயணிக் கும் பொதுமக்களும் சொல்லொண்ணாத் துயரத் திற்கு ஆட்பட்டுள்ளனர் எனவே, தலைமைச் செயலக பணியாளர்கள் பணிக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக சேப்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையங்களி லிருந்து தலைமைச் செயல கத்திற்கும், மறுமார்க்கத் திலும், போதிய பேருந்து களை இயக்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்சாதன பொருட்கள் தீப்பிடித்து  4 பேர் தீக்காயம்

தாம்பரம்,ஆக.28- குரோம்பேட்டை அடுத்த துர்கா நகர் தண்டுமாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஞாயிறன்று இரவு இப்பகுதியில் திடீ ரென உயர் மின்அழுத் தம் ஏற்பட்டது. இதன்காரண மாக வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் வெடித்து தீப்பிடித்தன. அப்பகுதியில் உள்ள கோலாகியம்மாள் (53) என்பவரது வீட்டிலும் இருந்த மின்சாதன பொருட்கள் எரிந்தன. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த கோலாகியம்மாள், ஏழு மாத கர்பிணியான சித்ரா(30), இரண்டு மாத குழந்தையான அஜய்குமார், 4 வயது சிறுவன் ரோஹித் ஆகியோர் மீது மின்வயரில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டு  உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

ரத்த தான விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம், ஆக.28- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்த தான விழிப்புணர்வு முகாம் வரலாற்று துறை சார்பில் நடைபெற்றது.  செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்புபாளர் முனைவர். தி. ராஜ் பிரவின் ரத்த தானத்தின் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். மாணவர்களின் ரத்தம், உறுப்பு மற்றும் உடல் தான நடைமுறைகள் பற்றி தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவை விருது பெற்ற எஸ். ராமசந்திரன், விளக்கினார்.  கலந்துரையாடல் நிகழ்வு மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டது. வரலாற்று துறை மூத்த பேராசிரியர். முனைவர். ஏ. திருமுருகன் வாழ்த்துரை வழங்கினார். ரத்த தான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க தனி அதிகாரி சு. செந்தில்நாதன் செய்திருந்தார்.

விழுப்புரத்தில் ஹாக்கி,நடை போட்டிகள்:  ஆட்சியர் தகவல்

விழுப்புரம்,ஆக.28- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 தேதியன்று மேஜர் தயான் சந்த்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு ஆக்கி மற்றும் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரம் நடை போட்டிகள் நடத்தப்படுகிறது.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயிலில் கரும்புகை:  பயணிகள் அதிர்ச்சி அம்

அம்பத்தூர், ஆக. 28- திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி திங்கட்கிழமை காலை மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை 7.15 மணியளவில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு அந்த மின்சார ரயில் வந்தபோது ஒரு பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளி வந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த ரயில் பெட்டி மட்டும் தனியாக கழற்றப்பட்டு ஆவடி பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் அரை மணி நேர தாமதத்துக்கு பின்னர் அந்த மின்சார ரயில் மீண்டும் சென்ட்ரல் நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மின்சார ரயில்கள் வேகமாக செல்லும் போது பிரேக் அழுத்தம் காரணமாக இது போன்று கரும்புகை வெளிவரும். இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ரயில் பெட்டியில் வழக்கத்திற்கு மாறாக கரும்புகை சற்று அதிகமாக வெளியேறியது. இதனால் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது என்று கூறினார்.

கழிவுநீரால் ஏ.சி.எந்திரங்கள் சேதம்

சென்னை,ஆக.28- வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வருவதால் வீடுகளில் ஏ.சி.யை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் அல்லது கழிவுநீர் உந்து நிலையம் அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் ஏ.சி. எந்திரங்கள் கழிவுநீரில் இருந்து வெளியேறும் நீராவி மற்றும் வாயுக்களால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி.யின் ஓய்வு பெற்ற வேதியியல் பொறியியல் துறை பேராசிரியர் டி. சுவாமிநாதன் கூறியதாவது:- தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் சல்பைட் வாயு வெளியேறுகிறது. இது அழுகிய முட்டையை போன்ற துர்நாற்றத்தை வீசும். இது கந்தகமாகவோ அல்லது கந்தக அமிலமாகவோ மாறக்கூடும். இவை ஏ.சி.யின் செப்புப் பகுதிகளுடன் வினைபுரிந்து, அதை அரித்து வாயு கசிவை ஏற்படுத்துகிறது. மற்ற மின் சாதனங்களில் ஏ.சி.யை போல அதிக செப்பு பாகங்கள் இல்லை, அதனால்தான் டி.வி. போன்ற பிற மின் சாதனங்களை விட ஏ.சி. எந்திரங்கள் மட்டுமே அடிக்கடி சேதமடைகின்றன என்றார்.

புதுவை-சென்னை விரைவு ரயிலை  முற்றுகையிட்டு பயணிகள் போராட்டம்

முன்பதிவில்லாத பெட்டிகளை கூடுதலாக இயக்கக்கோரிக்கை

மதுராந்தகம்,ஆக.28- புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு பயணிகள் விரைவு ரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.  இந்த ரயில் காலை 7.20 மணிக்கு மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வேலை பார்த்து வரும் மதுராந்தகம், செய்யூர், சூனாம் பேடு, பவுஞ்சூர், கூவத்தூர், தச்சூர், பெரும்பாக்கம், எண்டத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள்  தினந்தோறும் பயணம் செய்வது வழக்கம். மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இருந்து காலையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.   முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகம் இருக்கும்போது பயணிகள் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்துவந்தனர். இந்த நிலையில் மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு திங்களன்று காலை 7.20 மணிக்கு வழக்கம்போல் புதுச்சேரி-சென்னை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் பயணம் செய்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஏற்கெனவே முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்ததால் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளால் அதில் ஏறமுடியவில்லை. இதையடுத்து அவர்கள் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏற முயன்றனர். ஆனால் அதில் ஏற்கனவே இருந்த பயணிகள் ரயில் பெட்டியின் கதவுகளை மூடி இருந்ததாக தெரிகிறது.  இதனால் பயணிகளால் ரயிலில் ஏறமுடியாத சூழல் ஏற்பட்டது. ரயிலும் புறப்பட தயாரானது. இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் டிக்கெட் கொடுக்கும் கவுண்டர் மற்றும் சிக்னல் இயக்கும் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ரயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பின்னால் தென்மாவட்டங்களில் இருந்து வந்த அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் மேல்மருவத்தூர், திண்டிவனம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.  இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு நடத்தினர். பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் சமாதானம் பேசி அதில் பயணிகளை ஏற அனுமதித்தனர். பயணிகள் அனைவரும் ரயிலில் ஏறியதும் சுமார் 30 நிமிடம் தாமதமாக சென்னை நோக்கி புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. பயணிகள் போராட்டம் காரணமாக மதுராந்தகம் ரயில் நிலையம் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா 
ஆலோசகரை தேர்வு செய்ய ஒப்பந்தபுள்ளி வெளியீடு

சென்னை, ஆக.28- சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பதற்கான ஆலோசகரை தேர்வு செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு தேனாம்பேட்டையில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அப்பகுதியில் தோட்டகக் கலைத்துறை சொந்த மான 23 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 17 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, இந்த பூங்கா கட்டப்பட்டது. இந்த நிலையில், மீத முள்ள 6 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலமும் கடந்த ஜூன் மாதம் மீட்கப்பட்டது.  அதாவது, கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்கா அருகே 6.09 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.  அந்த பகுதியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பூங்கா அமைக்கப் படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் கூறினார். இந்த நிலையில், கதீட்ரல் சாலையில் ரூ.25 கோடியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த பூங்காவுக்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 18ம் தேதி இந்த ஒப்பந்தத்திற்கான கடைசி தேதி என அறி விக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி யில் தற்போது 786 பூங்காக்கள், 104 சாலை மைய தடுப்புகள், 113 போக்குவரத்து தீவுத்திட்டு கள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன.