districts

img

நில அளவையர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர்,ஆக.12-

     நில அளவையர் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    தமிழ்நாட்டில் செங்கல் பட்டு திருப்போரூர் வெங்க டேசன், திருவண்ணாமலை தண்டராம்பட்டு தரணி வாசன், கடலூர் திட்டக்குடி யில் வெள்ளியங்கிரி, கடலூர் பண்ருட்டியில் மகேஸ்வரன் ஆகிய நில அளவையர் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும் அரசு பணியை செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய வர்களை நடவடிக்கை எடுத்து கைது செய்ய வலி யுறுத்தியும் இந்த ஆர்ப்பாட் டம் நடை பெற்றது.

    தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநிலத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் செந்தில் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். தோழமை சங்க மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.