districts

img

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப் 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு எதிராக செப் 7 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. மறியல் போராட்ட கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் காட்பாடியில் வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியன் தலைமையில் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தை மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி துவக்கி வைத்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன் கே.ஜே.சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.