தொழிலாளர்களுக்கு எதிராகவும்,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் ஒன்றிய பாஜக மோடி அரசின் கொள்கைகளைக் கண்டித்து வெள்ளையனே வெளியேறு தினத்தில், புதுச்சேரியில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி இந்திரா காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில தலைவர் அபிஷேகம்,பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சிஐடியு தலைவர் பிரபுராஜ்,பொதுசெயலாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி தலைவர் ஞானசேகரன், ஏஐசிசிடியூ நிர்வாகி புருஷோத்தமன், எல்எல்எப் நிர்வாகி செந்தில், உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.