திருவண்ணாமலை,ஜுன்18-
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை தீத்தானூர் என்கிற கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் இரா. சரவணன் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாகி சத்யா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவாஜி, விச நிர்வாகிகள் டி. கே. வெங்கடேசன், ஆ.உதயகுமார், ஆர். ரவி தாசன் (சிபிஎம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜவ்வாது மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, வன உரிமை சட்டத்தின் படி, மனு செய்த அனைவருக்கும் வன உரிமை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.