districts

img

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன.30 அன்று சூளையில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி பொதுக்கூட்டம்

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜன.30 அன்று சூளையில் மதச்சார்பின்மையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் ஜா.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் ‘மதவாத தேசியம்’ எனும் நூலை வெளியிட, திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி பெற்றுக் கொண்டார். மாநிலத் தலைவர் கார்த்திக், மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், துணைச்செயலாளர் ஆ.பிரியதர்ஷினி எம்.சி., லோ.விக்னேஷ் உள்ளிட்டோர் பேசினர்.