பணி நியமனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் உள்ள 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மருந்தாளுநர்களை உடனே பணிவரன் முறை செய்திட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் கோரிக்கை அட்டை அணியும் இயக்கம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.