விழுப்புரம், ஜூன் 29-
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்க லம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி ஆலம்மாள் (60) ஆடு வளர்த்து வருகிறார். அந்தப் பகுதியிலுள்ள ஆளி யம்மன் கோவிலின் பின்புறத்தில் ஆட்டிற்கு தழை வெட்டு வதற்காக சென்றுள்ளார். அறுந்து கிடந்த மின் ஒயர் தெரியாமல் அவர் கையின் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.