districts

img

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் போக்சோவில் கைது

ராணிப்பேட்டை, ஜூலை 8 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த குட்டியம் கிராமத்தை சேர்ந்த உதயன் (64) விவசாயம் செய்து வரு கிறார். வாய் பேச முடியாத 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத் துள்ளார். அதைப் பார்த்த சிறுமியின் தாய் கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தி னர் வருவதைப் பார்த்த உதயன் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். பின்னர் சிறுமியின் தாய் கலவை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, உதயனை கைது செய்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.