10 ஆண்டுகள் பணி முடித்த மேல்நிலைநீர்தேக்க தொட்டி பராமரிப்பு, ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர், தூய்மை காவலர்கள் அனைவருரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி ஓஎச்டி ஆப்ரேட்டர் தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் திங்களன்று (ஜன.30) திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், மாவட்டச் செயலாளர் nஜ.ரமேஷ், பொருளாளர் குமரவேல், துணை நிர்வாகிகள் ஏ.பழனி, ஜி.மாரி, சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உட்பட பலர் பேசினர்.