விழுப்புரம், ஜூலை 19-
செஞ்சி வட்டத்தில் புதிரை வண்ணார் சாதி சான்று வழங்காமல் இழுத்தடித்து வரும் அதிகாரிகளை கண்டித்து துரும்பர் இன மக்கள் புதனன்று (ஜூலை 19) வட்டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள துரும்பர் (புதிரை வண்ணார்) இன மக்கள் வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் இருந்தாலும் இந்த மக்கள் தொழில் ரீதியாக புதிரை வண்ணார் பிரிவை சார்ந்தவர்கள். எனவே, தங்களை குழந்தைகளின் சாதிச் சான்றுகளில் இந்து ஆதிதிராவிடர் என்பதற்கு மாற்றாக புதிரை வண்ணார் என்று சான்றிதழ் கேட்டு தொடர்ந்து விண்ணப்பம் செய்து வரு கின்றனர்.
முன்னோர்களின் சாதிச் சான்றிதழ் ஆவணம் கேட்டும் அதிகாரிகள், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் புதிரை வண்ணார் என்று சாதிச் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிப்பு வருகின்றனர். இதனை கண்டித்து வட்ட வாரியாக சிறப்பு முகாம் நடத்தி புதிரை வண்ணார் சாதி சான்று வழங்க வலியுறுத்தி செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி னார். உரிய ஆவணங்கள் வைத்திருப்ப வர்கள் சான்றிதழ்களை 15 நாட்களுக்குள் வழங்குவதாகவும் ஆவணங்கள் இல்லாத வர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில் 20 தினங்களுக்குள் சாதி சான்றிதழ் வழங்கு வதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதிய ளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் அ.சகாதேவன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சையத் உஸ்மான், திராவிடர் கழகத்தின் கோபண்ணா, பழங்குடி இருளர் மக்கள் முன்னணி சுடரொளி சுந்தரம், அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் மழை மேனி பாண்டியன், சகோதரி அல்போன்சா, அருள் வளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.