கடலூர்,டிச.18- பண்ருட்டி அருகில் அருந்ததியர் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டா நிலத்தில் வீடு கட்ட விடாமல் அதிகாரி களின் உதவியுடன் தனி நபர்கள் அபகரிக்க முயற்சிப்பதை மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ளது திருவாமூர் ஊராட்சி, காமாட்சி பேட்டை கிராமங்கள். இங்கு 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 83 நபர்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் நான்கு பேர் அருந்ததியர் இனத்தை சேர்ந்த வர்கள். இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் சில தனி நபர்கள், அந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் தடுத்து வருகின்றனர். இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரி வித்தும் கண்டுக்கொள்ளவில்லை. புதுப்பேட்டை காவல்துறையினரும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், தனிநபருக்கு துணைபோகும் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எஸ்.கே.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டச் செய லாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், வி.சுப்பராயன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், பண்ருட்டி நகர செயலாளர் உத்தராபதி, நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் எம். ஜெயபாண்டியன், வட்டக் குழு உறுப்பினர்கள் லோகநாதன், பன்னீர், முருகன், பூர்வ சந்திரன், வினோத்குமார், தமிழ்ச்செல்வன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.