districts

img

வழிந்தோடும் சாக்கடை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் உள்ளது ஒட்டம்பட்டு ஊராட்சி மன்றம். இங்குள்ள மன்மதன் கோயில், பிள்ளையார் கோவில், மாரியம்மன் கோவில், பள்ளத்தெரு, புது தெரு ஆகிய தெருக்களில் சாக்கடை  தண்ணீர் ஆறாக பாய்தோடுகிறது. ஆனால் ஒருவரும் நடமாட முடியவில்லை. குழந்தைகள் உட்பட அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், தெருக்களில் தேங்கி உள்ள கழிவு நீரில் காகித கப்பல் விட்டு,நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஜி.செந்தில் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, டி.ராமமூர்த்தி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கே.விஜயகுமார்,மாதர் சங்கம் தலைவர் வி.தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.