ராணிப்பேட்டை, மார்ச் 2- சோளிங்கர் வட்டம், மரு தாலம் கிராமத்தில் டிராக்டர் மூலம் நெற்பயிர்களை அழித்து சேதப்படுத்திய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், மருதாலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியப்பா. இவரது மகன் நடராஜன். கருங்கல் என்ற இடத்தில் இருந்து குன்றுகளை சீரமைத்து மராமத்து செய்து கடந்த மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறார் கள். அந்த இடத்திற்கு சுமார் 17 ஆண்டுகளுக்கு வரி யும் செலுத்தியுள்ளனர். இந்நிலை யில் சோளிங்கர் வட்டாட்சியர், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஊழி யர்கள், நடராஜன் பயிரிட்டிருந்த நிலத்தில் டிராக்டர் மூலம் பயிர் களை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் சி.ராதா கிருஷ்ணன், வட்டாரச் செய லாளர் ஜெய்சங்கர், தலைவர் ஜெகன், நிலவு குப்புசாமி, குமார் ஆகியோர் சம்பவம் குறித்து கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் எல்.சி.மணி கூறுகையில், “தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இன மக்களுக்கு நிரந்தர வாழ்விடம் அளிப்பது வரவேற்கதக்க தாகும். அதே நேரத்தில், விவசாய நிலத்தில் சாகுபடி செய்திருக்கும் நெற்பயிரை அழித்திருப்பது ஈவிரக்கமற்ற செயலாகும். அதிகாரிகளின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுடன் நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.