வேலூர், டிச.28- வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த குகையநல்லூர் ஏரிக்கரை பகுதியில் சுமார் 25 குடும்பத்தினர் 40 ஆண்டு களாக வசித்து வந்தனர். இந்த இடம் நீர்நிலை புறம் போக்கில் வருவதாக கூறி அதை காலிசெய்ய வேண்டு மென காட்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டது. பின்னர் மின்சார இணைப்பையும் துண்டித்த னர். இதையடுத்து காட்பாடி வட்டாட்சியரை சந்தித்த போது மாற்று இடம் தருவ தாக கூறி 8 கிலோ மீட்டர் தள்ளி புத்தூர் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக எவ்வித அடிப்படை வசதி இல்லாத பகுதியில் இடம் ஒதுக்கி பட்டா வழங்கினர். அந்த இடத்தையும் அளந்து தர வில்லை. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று (டிச. 22) திடீரென நீர்வளத் துறை அதிகாரிகள் காவல் துறையினருடன் வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் வாகனங்களுடன் வந்து சில வீடுகளை இடித்தனர். அப்போது, சிபிஎம் காட்பாடி ஒன்றிய செயலாளர் ஆர்.சுடரொளியின் தலைமை யில் வட்டாட்சியர், நீர்வளத் துறை உதவி பொறியாளர், மின் வாரிய அதிகாரிகளை சந்தித்தனர். அப்போது குகையநல்லூரில் இடம் வழங்க வேண்டும். அது வரை தற்காலிகமாக தங்கி கொள்வதாக தெரி வித்தனர். இந்நிலையில், வியாழ னன்று (டிச. 28) நீர்வளத் துறை உதவி பொறி யாளர் ராஜ்குமார் தலை மையிலான அதிகாரிகள் மீண்டும் அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தை இடிப்பதாக கூறி வீடுகளை யும் இடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன், செ. ஏகலைவன், விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் சி.எஸ்.மகாலிங்கம், தாலுகா செயலாளர் எம்.கணேஷ், லோ.நவீன் (வாலிபர் சங்கம்) சரவணன், விஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஜேசிபி வாகனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். அந்த மக்களை காவல்துறையினர் வலுக் கட்டாயமாக வெளியேற்றி னர்.