districts

img

குடியிருப்புகளை அளவீடு செய்ய எதிர்ப்பு: திரும்பி சென்ற அதிகாரிகள்

சென்னை, நவ. 2 - திருவள்ளுவர் நகரை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் திருப்பி அனுப்பினர். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, 182 வது வட்டம், திருவள்ளுவர் நகரில் (பர்மா காலனி) 4.5 ஏக்கரில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் முறை சாரா தொழிலாளர்களாக உள்ளனர். இந்த இடத்தை நில மோசடிக்காரர்கள் அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கெ திரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் உள்ளது. இந்த நிலையில், அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். அதற்காக குடியிருப்புகளை அளவீடு செய்ய புதனன்று (நவ.1) வந்த அரசு அதிகாரிகள், காவல் துறை யினரை மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். சோழிங்கநல்லூர் பகுதிச்  செயலாளர் ப.ெஜயவேல், மாவட்ட குழு உறுப்பினர் முகமது ரஃபி, பகுதி குழு உறுப்பினர்கள் பூங்கா வனம், குணசேகரன், வடி வேலு, சிவக்குமார், சாந்தா தேவி உள்ளிட்டோர் அதி காரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேல் முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அளவீடு செய்யக் கூடாது என வாதிட்டனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்ற னர்.