districts

img

நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி: போராட்டம் விலகல்

விழுப்புரம்,செப்.8- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூர் கிராமத்தில் குறைந்தழுத்த மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி செப். 8 அன்று சம்பந்தப்பட்ட முண்டியம்பாக்கம் மின்வாரிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த னர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஒரத்தூர் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுனன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி ஒன்றிய பொறுப்பாளர்கள் எம்.சேகர், செயலாளர் பி.கலியமூர்த்தி, அமுதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.