சிதம்பரம்,பிப். 3- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை நகரத்தையும் கிள்ளை பேரூராட்சியில் இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இரு புறங்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சார்பில் கடந்த மாதம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பின்னர், மறியல் போராட்டத்திற்கு திட்ட மிடப்பட்டது. இந்த தகவலை அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் செல்வகுமார், தனது அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியச் செய லாளர் ஆழ்வார், சுனில், சுதாகர், ஜீவா, முத்துக்குமாரசாமி, வேல்முருகன், வினோபா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மிக விரைந்து நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக சாலை அமைத்து கொடுக்கப்படும் என்றும் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சிஎஸ்ஆர் நிதியிலிருந்து 50 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.