வேலூர், செப்.24 - வீட்டுமனை பட்டா, நலவாரிய அட்டை, சாதிச் சான்று வழங்க கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 2 அன்று வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் பி.நதியா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆகி யோரை சந்தித்து 118 மனுக்கள் கொடுத்த னர். இதைத் தொடர்ந்து, வேலூர் வட்டத்துக்கு உட்பட்ட இருளர் மற்றும் காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட 39 மனுக்கள் வேலூர் வட்டாட் சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. கோவிந்தரெட்டி பாளையம், செதுவாலை பகுதிகளைச் சார்ந்த 22 இருளர் பழங்குடி மக்களின் மனுக்கள் மீது ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் நரசிம்மன் விசா ரணை நடத்தினார். அம்மக்களிடம் இருந்து சாதிச்சான்று, ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை பெற்றுக் கொண்டு மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கு அனுப்பி வைத்தார். சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் அளித்த மனுக்கள் மீது செப் 25 புதனன்று விசாரணை செய்வதாக கூறியுள்ளார். இந்த விசாரணையின் போது மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம், பொருளாளர் எம்.உஷா, மாவட்டக்குழு உறுப்பினர் அம்மு மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.