விழுப்புரம், செப்.23- வயல்வெளியில் சாலை அமைப்பதாக உறுதி யளித்து ஏமாற்றிய அதிகாரிகளை கண்டித்து விழுப்புரம் மாவட்டம், காணை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு புத னன்று (செப்.20) மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டை நாமம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மூர்த்தி,ஆர்டி.முருகன், ஒன்றிய செயலாளர் பி.சிவராமன்,மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.நாக ராஜன், எஸ்.பிரகாஷ், ஒன்றிய குழு ஏ.ராஜிவ் காந்தி, சி.சடையப்பன், கே.தேவநாதன், ஆர்.ராம மூர்த்தி,கே.சாந்தி உட்பட 200- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மீண்டும் உறுதியளித்தனர், இதனையடுத்து ஆர்ப் பாட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.