districts

img

போராட்ட அறிவிப்பு எதிரொலி எடைக்கல் கிராம தலித் மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க அதிகாரிகள் உறுதி

கள்ளக்குறிச்சி, டிச.29 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள எடைக்கல் கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு தனியாக நியாய விலை கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து, பகுதி நேரமாக நியாய விலைக் கடை திறக்கப்பட்டது. ஆனால், கடந்த 18 மாதங்களாக மண்ணென்ணை வழங்கப்படவில்லை. இதனால் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மா.ஜெகநாதன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் சசிகலா, வரு வாய் ஆய்வாளர் கோதண்டராமன், திருப் பெயர் கூட்டுறவு வங்கி செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர். சீனிவாசன், கிளைச் செயலா ளர் ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து வேலை நாட்களிலும் நியாய  விலைக் கடையை திறக்கப்படும். அத்தியாவ சிய பொருட்கள், மண்ணெண்ணெய், கோதுமை முறையாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.