சிதம்பரம், மார்ச். 14- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை - பொன்னம்பட்டு பகுதியை இணைக்கும் வகையில் வெள்ளாற்று பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இரு முனைகளில் உள்ள இணைப்பு சாலைகள் பழு தடைந்துள்ளது. எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என சிபிஎம் சார்பில் போராட்டம் நடை பெற்றது. இதனையொட்டி கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. ஆனால் பரங்கிப் பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகள் பராமரிப்பின்றி உள்ளது. இங்கு சாலை அமைக்க சிபிஎம் வலியுறுத்திய போது நெடுஞ்சாலை துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை. இதனை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மார்ச் 15 அன்று பரங்கிப்பேட்டை பெரிய மதகு பாலம் அருகே மறியல் போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவல கத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி தலைமை தாங்கினார். உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, சிபிஎம் மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் விஜய், சங்கர், முகமது யூனுஸ் (திமுக), ராஜேஸ் வரி (சிபிஎம்), செய்யது அலி (காங்.) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பரங்கிப்பேட்டை பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக சிதம்பரம் சார் ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததால் மறியல் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.