சென்னை, ஆக. 12-
காஞ்சிபுரம் மாவட்ட நியமன அலுவலர் டி.அனுராதா ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில ஆணை யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு.சி.முருகேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ஜான் சிம்சன், நிர்வாகிகள் பெ.நல்லத்தம்பி, ஆ.முத்துராஜா, இரா.வேலவன், ஜெ.ரவிச்சந்திரன், வ.காமராஜ், ஜோ.மகனதாஸ், கி.ஜெபராஜா ஷோபன குமார், இரா.வேலவன், தா.ஸ்டாலின் ராஜரத்தினம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
இதுகுறித்து அ.தி.அன்பழகன் கூறு கையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் அனுராதா கடந்த ஜுன் மாதம் இந்த மாவட்டத்தில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேக ரனை விதிகளை மீறி தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார். மாநில ஆணையர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தோம்.
ஆணையர் கையொப்பமிட்ட அரசு ஆவணத்தை பத்திரிக்கையாளருக்கு வழங்கியதாகக் கூறி உணவு பாதுகாப்பு அலுவலர் சி.சுகுமாரனை கடந்த 1ஆம் தேதி தற்காலிக பணி நீக்கம் செய்து அனுராதா உத்தரவிட்டுள்ளார். இதை ரத்து செய்ய வலியுறுத்தி மாநில நிர்வாகிகள் கடந்த 2ஆம் தேதி மாநில ஆணையரை சந்தித்தோம். அதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை.
பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், ஊழி யர்கள் விரோதப் போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நியமான அலுவலர் டி.அனு ராதா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றார்.