districts

img

நிலத்தை ஒப்படைக்காத அதிகாரிகள் 25 ஆண்டு காலமாக போராடும் தலித் மக்கள்

கிருஷ்ணகிரி,ஜூன் 17-

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சென்னத்தூர், சாணமாவு பகுதி களில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு 1997 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ் நாடு தீண்டாழை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது.

   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது சென்னத்தூர், சாணமாவு கிராமங்கள். இந்த கிராமங்களில் வசித்து வரும் ஆதிதிராடவிர் மக்க ளில் 85 குடும்பங்களுக்கு 1997- 98ஆம் ஆண்டில் இலவச வீட்டு மனைப் பட்டா ஒன்றுபட்ட தருமபுரி மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் வழங்கப்பட்டது.  

    அந்த வீட்டு மனைப் பட்டாக்களுக் கான இடத்தை இதுவரைக்கும் அதி காரிகள் ஒப்படைப்பு செய்யவில்லை. இதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை.

    பட்டா இருந்தும் நிலத்தை ஒப்படைப்பு செய்யாமல் இழுத்தடிப்பு செய்து வரும் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் ஆனந்த குமார், செயலாளர் நாகேஷ்பாபு, துணைச் செயலாளர் நாராயணமூர்த்தி, துணைத் தலைவர் இருதயராஜ் கலந்து கொண்டனர்.

     அப்போது, பட்டா வழங்கி 25 ஆண்டுகளை கடந்தும் நிலத்தை ஒப்படைக்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் பேசினர்.  

    அஞ்செட்டி வட்டம் கோட்டையூர் கோவில் திருவிழாவையொட்டி 3 பெண்கள் உட்பட 12 க்கும் மேற்பட்ட தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்தி கள் கொடூர கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கும் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே கொலை முயற்சி வழக்குகளை பதிவு செய்திருக்கும் காவல்துறைக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.