காஞ்சிபுரம், மார்ச் 6 - பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் செயலாட்சியராக பணி யாற்றி வரும் துணைப்பதி வாளரை பணி இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழி யர் சங்கம் சார்பில் காஞ்சி புரம் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு புத னன்று (மார்ச் 6) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவு துறை ஊழி யர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.சத்யா நாராயணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியில் செயலாட்சியராக பணி யாற்றி வரும் உமாதேவி, கூட்டுறவுத் துறை ஊழி யர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி அவதூறு பேசி வருவதாக வும், ஊழியர்களை அலட் சியமாக செயல்படுத்துவது என பல விதங்களில் மன உளைச்சல் ஏற்படுத்துவ தாக கூறி ஊழியர்கள் ஆவேச முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.