சென்னை மாநகராட்சி 123ஆவது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி அலுவலக திறப்பு விழா புதனன்று (மார்ச் 16) நடைபெற்றது. எண்.29, சி.பி.ராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -18 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு திறந்து வைத்தார். சிபிஎம் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயற்குழு எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயசங்கரன், திமுக பகுதிச் செயலாளர்கள் நந்தனம் கி.மதி எம்.சி., எஸ்.முரளி, வட்டச் செயலாளர்கள் மூ.ராஜேந்திரன், சு.வில்லவன், சிபிஎம் வட்டச் செயலாளர்கள் ரமேஷ், மாரிமுத்து, செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.