செங்கல்பட்டு,ஆக. 26-
காலாவதியான பரனூர் சுங்கச் சாவடியை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நகருக்கு அருகில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி பல வகை யில் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சுங்கச்சாவடி யின் அனுமதி 2019 ஆம் ஆண்டுடன் காலவதியாகிவிட்டதாக கூறப்படுகி றது. தொழுப்பேடு சுங்கச் சாவடியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலை வுக்கு குறைவானதாகவே பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் விதிமுறைக்கு மாறாக செயல்படும் சுங்கச் சாவடிகளை நீக்கக் கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதில் பரனூரும் ஒன்று. இவற்றுக்கெல்லாம் மேலாக. ஒன்றிய தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் (சிஏஜி 2023) பரனூர் சுங்கச்சாவடி சட்டத்தை மீறி கூடுதலாக ரூ.28 கோடி வசூலிக்கப் பட்டு இருப்பதாக குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது.
பல்வேறு சட்ட விதி மீறல்கள் உடன் செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடி யில் தினசரி பல ஆயிரக்கணக்கான வாகன பயனாளிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பண இழப்புக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது. எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சி நிர்வாகம் பரனூர் சுங்க சாவடியை அகற்றி அதன் சட்டவிரோத கொள்ளையை தடுத்து நிறுத்த நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.