districts

img

நவ.22 பல்லவன் இல்லம் முற்றுகை: 32 பணிமனைகளில் சிஐடியு பிரச்சாரம்

சென்னை, நவ. 17 - ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.22 அன்று பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2015ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படியை நிர்வாகம் உயர்த்தி வழங்கவில்லை. அக விலைப்படியை உயர்த்தி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிர்வாகம் அதை அமல்படுத்தவில்லை. எனவே, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தை விளக்கி நவ.16, 17 தேதிகளில் சென்னையில் உள்ள 32 பணிமனைகளிலும் விளக்க கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டங்களில் பேசிய தலை வர்கள், ஓய்வு பெற்ற, மரணமடைந்த ஊழி யர்களுக்கு ஓய்வுக் கால பணப் பலன்களையும், ஒப்பந்தப்படி ஓய்வூ தியத்தையும் வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தப்படி நிலுவைத் தொகையை  வழங்க வேண்டும், வேலை நிறுத்தம் செய்த 21 நாட்களை முறைப்படுத்தி, ஊதிய முரண்பாட்டை (பே அனாமலி) சரி செய்ய வேண்டும். வேலைக்கு வந்தும், பணி கிடைக்காமல் திருப்பி அனுப்பப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும், மேல்முறையீடுகளுக்கு செல்லாமல் தொழி லாளர் நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு, பேருந்துகளின் நேர அட்ட வணையை மாற்றி அமைக்க வேண்டும், தரமான உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது என்றனர். இந்த விளக்கக் கூட்டங்களில் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாளி, சம்மேளன துணைத் தலை வர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.