திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் தமுஎகசவும் இணைந்து நடத்திய விழாவில் எழுத்தாளர் கண்ணன் ராமசாமி எழுதிய ஹமார்ஷியா நாவலை அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தகுமாரி வெளியிட, எழுத்தாளர் இரா.வேல் கண்ணன் பெற்றுக்கொண்டார். தமுஎகச கிளை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கி.பாரி, மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மோசஸ்பிரபு, மின் இதழ் பதிப்பாளர் சந்தோஷ், தலைமை ஆசிரியர் ஞானசேகரன்,பூந்தமல்லி அறிவியல் இயக்க செயலாளர் கமலேஷ் உள்ளிட்டோர் பேசினர்.