சென்னை, நவ.7- தீபாவளியையொட்டி பாது காப்பான முறையில் பட்டாசு களை வெடிப்பதற்கான விதிமுறை கள், கட்டுப்பாடுகளை சென்னை காவல்ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்க வும் வெடிக்கவும் வேண்டும். பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரி விக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடி களை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது. இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசு கள் வெடிக்கக்கூடாது. மக்கள் நடமாடும் இடத்திலும் குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடி களை வெடிக்கக்கூடாது.
எக்கா ரணத்தைக் கொண்டும் குடிசை களின் பக்கத்திலோ, ஓலைக்கூரை கள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்து வதை தவிர்க்க வேண்டும். பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்து கள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும். உள்ளிட்ட 19 கட்டுப்பாடு களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு விதி முறை களை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும். அவசர உதவி எண் மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடி யாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி பொதுமக்களை சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண் டுள்ளது. மேலும் சென்னையில் கூட்டநெரிசல் அதிகரிப்பதால் 18000 காவலர்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது என்றும் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கூறியுள்ளார்.