சென்னை, ஜூன் 11-
பள்ளிகள் இன்று திறக்க உள்ள நிலை யில், கல்வி உபகரணங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கட்கிழமை (ஜூன் 12) திறக்கப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உப கரணங்களை வாங்குவதற் காக கடை களில் திரண்டனர்.
புத்தகம், டிபன் பாக்ஸ், பேனா, பென்சில், சிலேட், ஸ்கூல் பேக் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க, குழந்தை கள் ஆர்வத்துடன் கடைகளை முற்றுகை யிட்டனர்.
ஆனால் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு விலை கணிசமாக அதி கரித்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்கூல் பேக் ரூ.500 வாங்கிய தாகவும் தற்போது ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதாகவும் பெற்றோர்கள் தெரி விக்கின்றனர்.
மேலும் ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால், ரூ.4000 முதல் 5 ஆயிரம் வரை செலவாகிறது என்றும் கூறுகின்றனர். சென்ற ஆண்டை விட பேனா, பென்சில், இங்க் பாட்டில், ஏ போர் பேப்பர், பெரிய நோட், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஆகிய வற்றின் விலை அதிகரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினாலும் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் கட்டாயம் வெளியில்தான் வாங்க வேண்டும். இந்த விலையேற்றத்தினால் சாதாரண ஏழை எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர்.