districts

img

மக்களுக்கு பயனில்லாத தரமற்ற தார் சாலை

திருவண்ணாமலை,ஆக.3-

     செங்கம் அருகே தார் சாலை அமைத்த ஓரிரு நாட்களி லேயே பெயர்ந்து வருவதாக, அப்பகுதி பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒடஞ்சமடை. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் ஓரிரு நாட்களிலேயே பெயர்த்து வரும் நிலையில் உள்ளதால் எவ்வித பயனும் இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.