சென்னையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், ராயப்பேட்டை ஜி.பி.சாலை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, சைதாப்பேட்டை பஜார் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.