சென்னை, டிச. 6- மிக்ஜம் புயலையொட்டி பெய்த கனமழை யால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீர், மின்சாரம் துண்டிப்பால் வடசென்னை பகுதி மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் திங்களன்று (டிச.4) கடுமையான சூறைக் காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்தது. பல சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்து கிடந்ததாலும், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. அது மட்டுமல்லாது ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. மேலும் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயலானது சென்னையை விட்டு கடந்து சென்றாலும் அதன் பாதிப்புகளிலிருந்து பல பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குறிப்பாக வடசென்னையின் அனைத்து மண்டலங்களும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் மண்டலம் 1இல் 4, 6, 7 வார்டுகள் மற்றும் எண்ணூர் 2ஆவது வார்டு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் இடுப்பளவு தேங்கி நிற்கிறது. பெரும்பான்மை யான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படு கின்றனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள 9க்கும் மேற்பட்ட முகாம்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உதவி 4ஆவது வார்டில் முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பாய், பெட்ஷிட், கொசு வர்த்தி, மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட் களை வழங்கினார். மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு இரண்டு இடங்களில் மையப் படுத்தப்பட்ட சமையல் கூடம் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறார்.
மின்கோபுரம் சேதம்
கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைத்திருந்த மின் கோபுரம் சேதமடைந்ததால் 1ஆவது வார்டு முதல் 8ஆவது வார்டு வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்துள்ள மின் ஊழியர்கள் மின் கோபுரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் முழுமையாக சீரமைத்து மின்சாரம் வழங்க இரண்டு நாட்கள் ஆகும் எனக் கூறப்படு கிறது. தண்ணீரை விரைந்து வெளியேற்றக் கோரியும், மின் இணைப்பை உடனடியாக வழங்கக் கோரியும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மணலி மணலி மண்டலம் 2இல் 18ஆவது வார்டுக்குட்பட்ட மணலி, சாலைமா நகர், சிபிசிஎல் நகர், கலைஞர் நகர், 19ஆவது வார்டு ஆம்ஸ்ட்ராங் நகர், சின்ன மாத்தூர், அருளானந் தம் நகர், மஞ்சம்பாக்கம், 20ஆவது வார்டு பெரிய தோப்பு, பலராம் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சின்னக்கண்ணு தெரு, 22ஆவது வார்டு சின்ன சேக்காடு பல்ஜி பாளையம், தங்கராஜ் தெரு, மகாத்மா காந்தி தெரு, 15ஆவது வார்டு மணலி நியூ டவுன், 16ஆவது வார்டு ராஜீவ் காந்தி நகர், ஆண்டார் குப்பம், கண்ணியம்மன் பேட்டை, மணலி புதுநகர், சடையங்குப்பம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிபிசிஎல் நகரில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும்பான்மையான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு சுமார் 9 மேற்பட்ட முகாம்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசி களுக்கு புதன்கிழமை காலை முதல் தான் உணவு வழங்கப்பட்டுள்ளது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
மாதவரம்
மாதவரம் மண்டலம் 3இல் 28ஆவது வார்டுக்குட்பட்ட உடையார் தோட்டம், 29ஆவது வார்டுக்குட்பட்ட பத்மாவதி நகர், பாலாஜி நகர், 30ஆவது வார்டுக்குட்பட்ட தணிகாசலம் நகர், ‘எப்’ பிளாக், ‘இ’ பிளாக், வஜ்ரவேல் நகர், 32ஆவது வார்டுக்குட்பட்ட திருமால் நகர், ஐயன் திருவள்ளுவர் சாலை ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெரும்பான்மை யான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் பால் பண்ணை அரசு குடியிருப்பு மற்றும் தனியார் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.
இயற்கை உபாதை கழிக்க முடியாமல் அவதி
மாநகராட்சி சார்பில் இலவசமாக 2 லிட்டர் பால், உணவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் இவையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. எங்களின் அத்தியாவசியமான காலைக் கடன்களை முடிக்க முடியவில்லை. எனவே முதலில் தண்ணீரை வெளியேற்றுங்கள் எனக் கூறி தபால் பெட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்.கே.நகர் ஆர்.கே. நகர் மண்டலம் 4இல் 34ஆவது வார்டுக்குட்பட்ட சின்னாண்டி மடம், கொடுங்கை யூர் 35ஆவது வார்டு கண்ணதாசன் நகர், 36ஆவது வார்டு எம்.கே.பி.நகர், 37ஆவது வார்டு உதயசூரியன் நகர், 41ஆவது வார்டு எழில் நகர், எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்ய நகர், சந்திரசேகர் நகர், கண்ணகி நகர், கருமாரி யம்மன் நகர், கோபால் நகர், நேரு நகர், கந்தி தெரு, 45ஆவது வார்டு எம்.எம்.கார்டன், ஸ்டீபன்சன் சாலை, பி.பி.ரோடு, 46ஆவது வார்டு பள்ளத் தெரு, ஜெ.ஜெ. நகர், தேபர் நகர் மற்றும் 38, 39, 40, 42, 47 ஆகிய வார்டுகளி லும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 12 முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 41ஆவது வார்டில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மாமன்ற உறுப்பினர் விமலா உதவி
இங்குள்ள முகாம்களில் தங்கி உள்ளவர்க ளுக்கு மாமன்ற உறுப்பினர் பா.விமலா தொய்வின்றி உதவிகளை செய்து வருகிறார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு, பாதிக்கப் பட்டவர்களுக்கு உணவைத் தவிர வேறு எதுவும் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் வியாசர் பாடி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தண்ணீரை வெளியேற்றக் கோரி பெரம்பூரில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராயபுரம் ராயபுரம் மண்டலம் 5இல் 48ஆவது வார்டுக்குட்பட்ட பார்த்தசாரதி நகர், ஸ்ரீனிவாச புரம், சேஷா கிராமணி தோட்டம், டிபிகே தெரு, கண்ணன் ரவுண்டானா, நைனியப்பன் தெரு, பார்த்தசாரதி 1 முதல் 10 தெருக்கள், 53ஆவது வார்டு கெனால் தெரு, ஸ்டான்லி நகர், காத்படா, மூலகொத்தலம், ராமதாஸ் நகர், மாடர்ன் சிட்டி, போஜராஜ நகர் ஆகிய பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. 50ஆவது வார்டு ஜி.எம். பேட்டை, பனை மரத் தோப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இங்குள்ள மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
திருவிக நகர்
திருவிக நகர் மண்டலம் 6இல் 74ஆவது வார்டுக்குட்பட்ட குக்ஸ் ரோடு, ஜமாலியா, 71ஆவது வார்டு மேட்டுப்பாளையம், 72ஆவது வார்டு புளியந்தோப்பு, 73ஆவது வார்டு நம்மாழ் வார்பேட்டை, அயனாவரம் சிக்னல் முதல் ஓட்டேரி மேம்பாலம் வரை, 74ஆவது வார்டு கே.எம்.கார்டன் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் அம்பத்தூர் மண்டலம் 7இல் 82ஆவது வார்டுக்குட்பட்ட கருக்கு தமிழ்நாடு மின்வாரிய காலனி, 84ஆவது வார்டு கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பெரியார் நகர், 85ஆவது வார்டு காமராஜபுரம் டோபி காலனி, சலவையாளர் நகர் 86ஆவது வார்டு தொழி லாளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தொழிற்பேட்டையில் உற்பத்தி பாதிப்பு
அம்பத்தூர் தொழிற்பேட்டையின் ஒரு பகுதி தொழிற்சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. கொரட்டூர் ஆவின் பால் பண்ணை மற்றும் பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கிய தால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு
பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மின்சாரம் இல்லாததால் வீட்டிற்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ள தாகவும் பாதிக்கப்பட்ட கூறுகின்றனர். மேலும் பால் கிடைக்கவில்லை என்றும், பால் கிடைக்கும் இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தி விற்கப்படு வதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலைமறியல் தண்ணீரை வெளியேற்றக் கோரி வடசென்னைக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலை மறியல், மின்வாரிய அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் வடசென்னையில் தொழிலாளர் கள், தினக்கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். மழை வெள்ள பாதிப்பி னால் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்படு கின்றனர். எனவே அரசு முறையாக மழைநீர் வடிகால் வாய்கள், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படுத்தினால் மட்டுமே வருங்காலங்க ளில் இதுபோன்ற பேரிடர்களை சமாளிக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இல்லையென்றால் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் இந்த நிலை மாறாது.
அம்பத்தூர் எஸ். ராமு