இந்திய குடியரசின் 75ஆம் ஆண்டையொட்டி அமைப்புசாரா, கட்டுமானம், தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் கொளத்தூர் சுப்பிரமணி தோட்டம் பகுதியில் “தேசத்தை காப்போம், மதச்சார்பின்மையை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எழுத்தாளர் பிரியசகி, ஆசிரியை ரூபி, சங்க நிர்வாகிகள் ஜெ.ஸ்டாலின், மு.நாகலிங்கம், மு.ஜெயராமன், பா.ஹேமாவதி, ம.ஹர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.