districts

img

வேலை வழங்காத அதிகாரி 100 நாள் திட்ட பயனாளிகள் தர்ணா

ராணிப்பேட்டை, ஆக. 18 -  

    ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த கீழ்மின்னல் ஊராட்சியில் 100 நாள் வேலை  திட்டத்தில் தொழி லாளர்கள் பணி செய்ய  அனுமதிக்காத மேற்பார் வையாளர் வளர்மதியை கண்டித்து வியாழனன்று (ஆக. 17) மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் தர்ணா செய்தனர்.

    ரத்தனகிரி அடுத்த கீழ்மின்னல் ஊராட்சியில் 5 குழுக்களாக மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆய்வு செய்த மேற் பார்வையாளர் வளர்மதி,  ஊழியர்களை தரக்குறை வாக பேசியதாக கூறப்படு கிறது. மேலும் ஊழியர்கள் வேலைக்கான அடையாள அட்டையை வாங்கி சென்று அலை கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்று கையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர்.

   ஊரக உள்ளாட்சித் துறை  அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.