districts

நோபில் டெக் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட வேண்டும் சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் அறிக்கை

காஞ்சிபுரம், ஆக.14-

        நோபில்டெக் தொழிலாளர் பிரச்ச னையில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

       இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தமிழக முதல மைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள அறிக்கை வருமாறு  

      காஞ்சிபுரம் மாவட்டம் உத்திர மேரூர் வட்டத்தில் இயங்கிவரும் "நோபில் டெக்" இரும்பு தொழிற்சாலை யில் வேலையிழந்த தொழிலாளர்க ளுக்கு  மீண்டும் வேலை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொழிற்சாலைக் குள் தொழிலாளர்கள் கடந்த 7 நாட்க ளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்நிறுவனத்தில் பணிபுரிந்த 18 தொழிற்ச்சங்க நிர்வாகிகளை எவ்வித காரணம் இன்றி கடந்த 2017ஆம் ஆண்டு நிர்வாகம்  டிஸ்மிஸ் செய்தது. வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டுமென்று கடந்த ஏழு ஆண்டுகளாக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இந்நிலையில் நீதிமன்ற வழக்கில் தற்போது தொழிலாளர்களுக்கும், தொழிற் சங்கத்திற்கும்  சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக  பல்வேறு தரப்பு களிடமிருந்து தகவல் வருகிறது.

     ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களை மீண்டும் பணிக்கு அழைக்க மறுத்து வருகிறது.  மேலும் 2022, 2023, 2024 ஆண்டுக்கான ஊதிய உயர்வு குறித்து பேச மறுப்பதோடு தொழி லாளர்கள் போராடும் இடத்தை நிர்வாகம்  முள்வேலி போட்டு மூடு கிறது. உணவு, குடிநீர் மற்றும் உடல் உபாதைகளை கழிக்கவும்  அனுமதி மறுக்கப்படுகிறது. மனிதாபிமானமற்ற இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சி புரம் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கடந்த ஆக.9 ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களிடம் பேச்சு நடத்திட நிர்வாகம் மறுத்து வருகிறது. வேலியே பயிரை மேய்வதுபோல  தொழிலாளர் நலத்துறையும் ''நோபில் டெக்" நிர்வாகத்திற்கு ஏற்றார் போல் செயல்படுவது வேதனைக்குரியது.

     தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும்  இப்பிரச்சனையில் உடனடி யாக தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.