districts

img

9 வருடமாக சம்பள உயர்வு இல்லை: கொட்டும் மழையில் போராடிய ஊழியர்கள்

புதுச்சேரி, நவ.14- ஊதிய உயர்வு வழங்க கோரி கொட்டும் மழையில் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரி  ஊழியர்கள்   காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு 2 வருடமாக கல்லூரி நிர்வாகம் வழங்காத பண்டிகை கால போனசை வழங்க வலியுறுத்தியும் 9 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி யும் கல்லூரி வளாகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு தலைவர்  கதிரேசன் தலைமை தாங்கி னார். சிஐடியு புதுச்சேரி மாநிலத் தலை வர் பிரபுராஜ், துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், செயலாளர் சீனிவாசன் நிர்வாகிகள் கந்தன், அமுதா, மின்னலா, சித்ரா, ஜெயந்தி, ராமஜெயம்,வள்ளி உட்பட திரளானோர்  பங்கேற்றனர்.  இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கோரிக்கை முழக்க மிட்டனர்.